துர்க்கை லட்சுமி சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவிகளை போற்றி வழிபடும் நவராத்திரி விரதம் இன்று ஆரம்பமாகிறது. இன்று ஆலயங்களிலும் வீடுகளிலும் பாடசாலைகளிலும் கும்பம் மற்றும் கொலு வைத்து பூசைகளை ஆரம்பிப்பார்கள்.நவராத்திரியின் முதல் மூன்று தினங்களும் வீரத்திற்கு அதிபதியான துர்க்காதேவிக்குரிய தினங்களாகும். பெண்களின் மாங்கல்ய தோஷத்தை நீக்கி மாங்கல்ய பாக்கியத்தை அளிப்பவள் துர்க்காதேவியாகும்.அடுத்த மூன்று தினங்களும் செல்வத்திற்கு அதிபதியான லட்சுமிக்குரிய தினங்களாகும். இறுதி மூன்று தினங்களும் கல்விக்கு அதிபதியான சரஸ்வதிக்குரிய தினங்களாகும். இறுதி 10ஆவது நாள் விஜயதசமியாகும். அன்றைய தினத்தில் ஆயுதபூசை நடத்தப்படும். விஜயதசமியில் புதிதாக தொழில் தொடங்குதல் உட்பட நற்காரியங்களை ஆரம்பிப்பார்கள். மாணவர்களுக்கு ஏடு தொடக்குவதும் விஜயதசமியில் ஆகும்.