Hot News
Home » செய்திகள் » துறைமுக நகரம் தொடர்பில் நாடாளுமன்றத்திற்கு விளக்கப்படும்: ரணில்

துறைமுக நகரம் தொடர்பில் நாடாளுமன்றத்திற்கு விளக்கப்படும்: ரணில்

சீனாவின் உதவியுடன் கொழும்பு காலிமுகதிடலுக்கு அருகில் கடலில் நிர்மாணிக்கப்படும் போர்ட் சிட்டி (துறைமுக நகரம்) திட்டம் தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை கிடைத்ததும், அது குறித்து நாடாளுமன்றத்திற்கு விளக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க போர்ட் சிட்டி(துறைமுக நகரம்) தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு இன்று நாடாளுமன்றத்தில் பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

கொழும்பு துறைமுக நகரம் தொடர்பாக சில கேள்விகள் எழுந்தன. அது அபிவிருத்தித் திட்டம் தொடர்பான ஆவணங்களை ஆராயுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனை ஆராய தனியான குழுவொன்று நியமிக்கப்பட்டதுடன் தனது தலைமையில் உப குழுவும் நியமிக்கப்பட்டது எனவும் பிரதமர் கூறியுள்ளார்.

முழுமையான அறிக்கை குழு வழங்கிய பின்னர் அது குறித்து நாடாளுமன்றத்தில் விளக்கப்படும். அத்துடன் அறிக்கை சீன தூதுவருக்கும் வழங்கப்படும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

TELO Media Team 1