Hot News
Home » செய்திகள் » தமது தாய் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டமையை நாமல் உணர்கிறாரா? சவீன் கேள்வி

தமது தாய் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டமையை நாமல் உணர்கிறாரா? சவீன் கேள்வி

கடந்த இரண்டரை வருடக்காலத்தில் தமது தாய் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டபோது தாம் எவ்வாறான உணர்வை கொண்டிந்தேன் என்பதை நாமல் ராஜபக்ச தெரிந்துக்கொண்டாரா? என்று முன்னாள் பிரதமநீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவின் மகன் சவீன் பண்டாரநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்

முன்னாள் முதல் பெண்மணியும் நாமல் ராஜபக்சவின் தாயாருமான சிராந்தி ராஜபக்சவை விசாரணைக்கு வருமாறு நிதிமோசடி தவிர்ப்பு பொலிஸ் பிரிவு அழைத்துள்ளது

இதனையடுத்து தமது தாயையும் சகோதரர்களையும் விட்டுவிடுங்கள் என்ற வாசகத்தை நாமல் ராஜபக்சää தமது முகநூலில் வெளியிட்டிருந்தார்

இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே சவீன் தமது கருத்தை பதிவுசெய்துள்ளார்

இந்தநிலையில் தமது தாயும் தந்தையும் மாமாவும் அரசியல்வாதிகள் இல்லை
எனினும் உங்களுடைய ஆட்சியில் அவர்களை மானக்கேடாக நடத்தியபோது நான் எந்தளவு கஸ்டப்பட்டிருப்பேன். ஊடகங்களி;ல் அரசாங்கம் முற்றிலும் பொய்யான செய்திகளை வெளியிடும்போது நான் எவ்வளவு தாக்கத்துக்கு உள்ளாகியிருப்பேன் என்று கேள்வி எழுப்பியுள்ள சவீன்ää அனுதாபத்தை அல்லது ஆதரவை எதிர்ப்பார்க்கும் முன்னர் நீங்கள் ஒரு சட்டத்தரணி என்ற அடிப்படையில் “மறுப்பக்கத்தையும் கேளுங்கள்” ( ‘audi alteram partem’ ) என்று சவீன் குறிப்பிட்டுள்ளார்

TELO Media Team 1