Category: செய்திகள்
சஜித்தின் பிரச்சார மேடையில் புறக்கணிக்கப்பட்ட மதத் தலைவர்கள்!
வவுனியாவில் இடம்பெற்ற ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பௌத்த, இந்து, கிறிஸ்தவ மத குருமார் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.
ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவினது தேர்தல் பரப்புரைக் கூட்டம் நேற்று (03) வவுனியா யங்ஸ்ரார் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
குறித்த கூட்டத்தின் பிரதான மேடையில் மதத்தலைவர்ககளுக்கும் இடம் ஒதுக்கப்பட்டு அவர்களும் அமர்ந்திருந்தனர்.
பொதுக் கூட்டத்தில் மூவினங்களையும் சேர்ந்த நான்கு மதங்களையும் சேர்ந்த மக்கள் கலந்து கொண்ட போதும் பௌத்த மதகுரு, இந்து மதகுரு, கிறிஸ்தவ மதகுரு ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.அவர்கள் எவரும் பிரதான மேடையில் காணப்படவில்லை.
இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த 6 மௌலவிகள் வரவழைக்கப்பட்டு அவர்கள் மதத்தலைவர்கள் அமரும் இடத்தில் இருந்ததுடன், ஒரு மௌலவி உரையாற்றியும் இருந்தார்.
ஆனால் ஏனைய மதத் தலைவர்கள் அழைக்கப்படவில்லை என அங்கு கலந்து கொண்டு ஏனைய மதங்களைச் சேர்ந்த மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் கைது!
சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி – தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தர்மபுரம் பகுதியில் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக குளக்கரை ஒன்றில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் 2613 லீட்டர் கோடாவும், 24 லீட்டர் கசிப்பும் பொலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த சந்தேக நபரை இன்றைய தினம் 04.09.2024 கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எம்.சதுரங்க தெரிவித்துள்ளார்.
யாழில் மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய ஆசிரியர் கைது!
யாழ்ப்பாணம், இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியவிளான் பகுதியில் 10 வயது மகளை பல நாட்களாக பாலியல் ரீதியாக தொந்தரவு செய்த தந்தை ஒருவர் இன்றையதினம் இளவாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாதகல் கடலில் படகு கவிழ்ந்து விபத்து – ஒருவரை காணவில்லை!
வட்டுக்கோட்டை சந்திக்கு அருகாமையில் விபத்து – முதியவர் வைத்தியசாலையில் அனுமதிப்பு!
இன்று காலை வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டுக்கோட்டை சந்தியில் இருந்து சித்தங்கேணி செல்கிற பக்கமாக அண்ணளவாக 150 மீற்றர்கள் தூரத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் முதியவர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
வீதியில் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று, குறித்த இடத்தில் வலது பக்கத்தில் உள்ள கிளை வீதிக்கு திரும்ப முற்பட்ட வேளை அதே திசையில் பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்து சம்பவித்துள்ளது.
இதன்போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிளின் சாரதியும், அவருக்கு பின்னால் அமர்ந்திருந்து தலைக்கவசம் இன்றி பயணித்த முதியவரும் காயமடைந்தனர். முதியவர் சம்பவ இடத்தில் மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் பணிகள் ஆரம்பம்!
எதிர்வரும் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. அந்தவகையில் வாக்காள அட்டைகள் தயாரிக்கும் பணிகள் யாவும் நிறைவடைந்துள்ளன.
இந்நிலையில் வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் பணிகள் இன்று நாடுபூராகவும் ஆரம்பமாகின.
அந்தவகையில் கிளிநொச்சி மாவட்டத்திலும் தபால் ஊழியர்களால் வாக்காளர் அட்டைகளை வீடுவீடாக சென்று விநியோகிக்கப்படுகிறது.
பொதுமகனிடம் கையூடு வாங்க முற்பட்ட இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடைநிறுத்தம்!
பொதுமகனிடம் கையூட்டு வாங்க முற்பட்ட இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
நேற்றையதினம் கிளிநொச்சி விவேகானந்தா நகர் பகுதியைச் சேர்ந்த நபர் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைவாக விசாரணை மேற்கொண்ட கிளிநொச்சி பொலிஸ் அத்தியட்சகர் இவ்வாறு இருவரையும் பணியிலிருந்து இடைநிறுத்தியுள்ளார்.
குறித்த பொதுமகனிடமிருந்து 5000 ரூபா பணம் பெற இருவரும் முயற்சித்துள்ளனர். இது தொடர்பாக விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறும், குறித்த இருவரையும் நேற்று முதல் பணியிலிருந்து இடைநிறுத்துமாறும் பொலிஸ் அத்தியட்சகர் உதவி பொலிஸ் அத்தியட்சகருக்கு உத்தரவிட்டுள்ளார்.
குறித்த இருவரும் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுபவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சமஸ்டிக்கோரிக்கையை தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைக்க முடியுமா..! சபா குகதாஸ் பகிரங்க சவால்
ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தில் சமஷ்டிக்கோரிக்கையை உள்ளடக்க முடியுமா என ரெலோ அமைப்பின் யாழ். மாவட்ட அமைப்பாளர் சபா குகதாஸ், மக்கள் விடுதலை முன்னணியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரனுக்கு சவால் விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இன்றைய தினம் (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக அனுர குமார திஸாநாயக்க போட்டியிடுகின்ற நிலையில் அவரது யாழ். மாவட்ட அமைப்பாளரான இராமலிங்கம் சந்திரசேகரன் தமிழ் மக்களிடம் பொய்களைக் கூறி வாக்கு கேட்க ஆரம்பித்துவிட்டார் என்றார்.
அதேவேளை, நாம் தமிழ் மக்களின் பொது வேட்பாளரை ஆதரித்துள்ளோம் அது தொடர்பில் மக்களிடம் தெளிவாகவே கூறியுள்ளோம் என தெரிவித்துள்ளார்.
சீன திட்டங்களை தமிழ் மக்கள் ஆரோக்கியமாக பார்க்கவில்லை: சபாகுகதாஸ் தெரிவிப்பு
வடக்கு – கிழக்கின் தமிழர் பகுதிகளில் சீன (China) அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் திட்டங்களை தமிழ் மக்கள் ஆரோக்கியமான திட்டமாக பார்க்கவில்லை என ரெலோ அமைப்பின் யாழ். மாவட்ட அமைப்பாளர் சபா குகாதாஸ் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் (Jaffna) உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் நேற்றையதினம் (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அண்மையில் சீன தூதுவரை சுமந்திரன் மற்றும் சாணக்கியன் சென்று சந்தித்திருந்தார்கள். அவர்களது சந்திப்பு தற்போதைய சூழ்நிலையில் ஒரு ஆபத்தான சந்திப்பாக பார்க்கும் நிலையில் தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வு விடயங்களில் பாதிப்பை ஏற்படுத்தும்.
ஏனெனில், தற்போது ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை மட்டும் வழங்கப்படுகின்ற நிலையில் ஜனாதிபதியை தீர்மானிப்பதில் வல்லரசுகளின் ஆதிக்கங்களே அதிகமாக காணப்படுகின்றன.
கடந்த தேர்தல்களிலும் வல்லரசுகளின் ஆதிக்கம் இலங்கையில் பிரயோகிக்கப்பட்ட நிலையில் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் சீன தூதுவரை சந்தித்தது தற்போதைய சூழ்நிலையில் ஏற்புடையதல்ல.
வடக்கு – கிழக்கு தமிழர் பகுதிகளில் சீன அரசாங்கத்தினால் பொருத்து வீட்டு திட்டம் மற்றும் கடற்தொழிலாளர்களுக்கு அரிசி என்பன வழங்கப்பட்டது. குறித்த திட்டங்களை மக்கள் தமக்கான ஆரோக்கியமான திட்டங்களாகப் பார்க்கவில்லை.
ஆகவே, மக்களின் விருப்பங்களை அறியாதும் எமது கலாசாரங்களை பின்பற்றாத வீட்டு திட்டங்களை வழங்கும் சீன அரசாங்கம் மக்களை கருத்தில் கொள்ளாது தமது பூலோக அரசியலை தக்க வைத்துக்கொள்வதற்காக செய்யும் வேலை திட்டமாகவே பார்க்க முடிகிறது” என கூறியுள்ளார்.