Hot News
Home » செய்திகள் » ராஜீவ்- ஜே.ஆர். ஒப்பந்தத்தை முதலில் மீறியது இந்தியாவே- விமல் வீரவன்ஸ

ராஜீவ்- ஜே.ஆர். ஒப்பந்தத்தை முதலில் மீறியது இந்தியாவே- விமல் வீரவன்ஸ

ராஜீவ்- ஜே.ஆர். ஒப்பந்தத்தை முதலில் மீறியது இந்தியாவே என இலங்கையின் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான அமைச்சர் விமல் வீரவன்ஸ கடுமையாகச் சாடியுள்ளார்.

கூட்டமைப்பை அழைத்துப் பேசுவது கேலிக்கூத்து என்றும் அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தியாவிற்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளமை குறித்தும் 13 ஆவது திருத்தம் குறித்தும் அங்கு பேசப்படவுள்ளமை தொடர்பிலும் வெளிவந்திருக்கும் செய்திகள் பற்றிக் கருத்து அமைச்சர் வெளியிட்டார்

அத்துடன் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை இலங்கை மீறுவதாக இந்தியா கருதுமானால் அது பெரும் கேலிக்கூத்து. முதலில் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை மீறியதே இந்தியாதான்.

இருப்பினும் இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அவர்கள் அழைத்து ஒப்பந்தத்தைப் பற்றித்தான் பேசுவார்களாக இருந்தால் அதைவிடக் கேலிக்கூத்து வேறெதுவும் இருக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

TELO Media Team 1