அவுஸ்ரேலியா கடற்பரப்பில் கடந்த புதன்கிழமை மூழ்கிய படகில் இலங்கையர்கள் முப்பது பேர் வரையில் இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
கடந்த புதன்கிழமை கொக்கோஸ் மற்றும் கீலிங் தீவுகளுக்கு மேற்கு பகுதியில் கடந்த புதன் கிழமை இந்த படகு காணாமல் போய் இருந்த நிலையில் அந்த படகு மூழ்கியிருந்தமை நேற்று தெரியவந்தது.
அதில் 30 இலங்கையர்கள் வரையில் இருந்திருக்கலாம் அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எனினும் இது குறித்த உறுதிப்படுத்தப்பட்ட செய்திகள் எவையும் இதுவரையில் வெளியாகவில்லை.
இதற்கிடையில் அவுஸ்ரேலியா மற்றும் இலங்கை அரசாங்கங்களின் கூட்டு கண்காணிப்பு நடவடிக்கையினை அடுத்து கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் கடந்த மாத இறுதி வரையில் 28 படகுகள் வழிமறிக்கப்பட்டுள்ளன.
இவற்றில் 80 பெண்கள் மற்றும் 100யிற்றும் அதிகமான குழந்தைகள் உள்ளிட்ட 480 பேர் அகதிகளாக செல்ல முற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.