13வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் அமைச்சரவை தீர்மானத்திற்கு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி அனுமதி அளித்துள்ளது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தலைமையில் நேற்று இரவு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூடியது.
இதன்போது 13வது அரசியல் அமைப்பு சீர்திருத்திற்கு கீழுள்ள இரண்டு மாகாண சபைகளை இணைப்பது அல்லது நீக்குவது உள்ளிட்டதிருத்தங்கள் தொடர்பில் நாடாளுமன்ற செயற்குழு அமைக்க அமைச்சரவை நேற்று அனுமதியளித்தது.
இதுதொடர்பிலும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் ஆராயப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.