தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு ஒன்று இந்த மாதம் இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொள்கிறது.
எதிர்வரும் 16ஆம் திகதி இந்த விஜயம் ஆரம்பமாகிறது.
கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத்தலைவர் இரா.சம்பந்தன் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா எம்.ஏ.சுமந்திரன் சுரேஸ்பிரேமசந்திரன் செல்வம் அடைக்கலநாதன் மற்றம் செல்வராஜா ஆகியோர் இந்த குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
இந்திய மத்திய அரசாங்கத்தின் விசேட அழைப்பின் பேரில் இந்த குழு இந்தியாவுக்கு விஜயம் செய்கிறது.
அங்கு அவர்கள் இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.