13ம் திருத்தச் சட்டத்தை நீக்குவதற்கு 3ல் இரண்டு பெரும்பான்மை தேவை.
எனினும் தற்போது அரசாங்கத்திற்கு 3ல் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொள்வது தொடர்பில் சந்தேகம் காணப்பட்டால் இதற்காக கருத்துக் கணிப்பை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது 13ம் திருத்தச் சட்டத்திக்கு எதிரான தேசிய அமைப்புகளின் ஒன்றியத்தின் இணைப்பாளர் குணதாஸ அமரசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தாம் ஜனாதிபதிக்கும் அறிவுறுத்தி இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்