இலங்கையின் கடற்பரப்பின் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி கடல்பகுதியில் இந்திய கடற்படையினர் தமது கண்காணிப்புக்களை தீவிரப்படுத்தியுள்ளனர்
கோடிக்கரை, நாகப்பட்டிணம், போன்ற கடற்பகுதிகளில் இந்திய கடற்படையினர் தமது கண்காணிப்புகளை அதிகப்படுத்தியுள்ளனர்.
இதன்போது சக்திவாய்ந்த தொலைத்தொடர்பு கருவிகளையும் இந்தியப்படையினர் பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இதேவேளை கடலுக்கு சென்றுள்ள இந்திய மீனவர்களின் விபரங்கள், அவர்களின் படகுகளுக்கான தொடர்புகள் என்பனவும் இந்திய கடற்படையினரால் சேகரிக்கப்பட்டு வருகின்றன
இதன் அடிப்படையில் அவசர நிலைமைகளில் இந்திய மீனவர்களுக்கு உதவும் செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக இந்திய கடற்படைத்தரப்பு தெரிவித்துள்ளது