13வது சரத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவது தொடர்பில், தமது கட்சி தொடர்ந்தும் எதிர்ப்பை வெளியிடும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
அதன் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இந்தக்கருத்தை வலியுறுத்தியுள்ளார்.
இந்த விடயத்தில் சிறுபான்மைக்கட்சிகள் இணைந்து செயற்படவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்
பல ஆண்டுகளுக்கு பின்னரே இந்திய இலங்கை உடன்படிக்கையின் மூலம் இலங்கை இனப்பிரச்சினை தீர்வுக்கு 13 வது அரசியல் அமைப்பு தீர்வாக முன்வைக்கப்படவுள்ளமையை யாரும் மறக்கமுடியாது.
இதேவேளை 13வது அரசியல் அமைப்பு மாற்றம், தொடர்பான சட்டமூலம் நாடாளுமன்றத்தில் வரவுள்ளமையால், சிறுபான்மை கட்சிகள் தீவிரமாக செயற்படவேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்