13வது அரசியல் அமைப்பு மாற்றம் தொடர்பில் நாடாளுமன்ற தெரிவுக்குழு அடுத்த வாரத்தில் அமைக்கப்படவுள்ள நிலையில், ஜாதிக ஹெல உறுமய 13வது அரசியல் அமைப்பு திருத்தத்தை மாற்றும் நடவடிக்கையை தொடர்ந்தும் முன்னெடுக்கும் என்று ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
1980 ஆம் ஆண்டுக்காலப்பகுதியில் செய்துக்கொள்ளப்பட்ட இந்திய இலங்கை உடன்படிக்கை, இலங்கையின் இறைமையை பாதிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டது
இது நாட்டுக்கு பாரிய அச்சுறுத்தலை விடுத்து வருகிறது.என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்
இந்திய அரசாங்கம் இலங்கையுடன் அவசரப்பட்டு உடன்படிக்கையை செய்துக்கொண்டபோதும் அதனை உரிய வகையில் நடைமுறைப்படுத்தவில்லை.
அவ்வாறு இந்திய அரசாங்கம் செய்திருக்குமானால் இலங்கைப்படையினர் உட்பட்ட 50 ஆயிரம் பேர் உயிரிழந்தமையை தடுத்திருக்கலாம் என்றும் ரணவக்க சுட்டிக்காட்டியுள்ளார்