இலங்கையில் பர்ஹா மற்றும் நிக்காப் போன்ற ஆடைகளை முஸ்லிம் பெண்கள் அணிவதை பொதுபல சேனா எதிர்த்துள்ளது
பொதுபல சேனாவின் செயலாளர் கலகொடத்த ஞானசார தேரர் இந்த எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
குறித்த ஆடைகளை அணியவேண்டுமானால் முஸ்லிம் பெண்கள், அராபிய நாடுகளுக்கு செல்லவேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்
முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடியப்படி வங்கிகளுக்கு செல்லும் அடையாள அட்டைகளை கொண்டு அவர்களின் முகங்களை பார்த்து அடையாளத்தை உறுதிப்படுத்திக்கொள்ள வங்கி அதிகாரிகளுக்கு சிரமங்கள் ஏற்படுகின்றன.
இந்தநிலையில் குறித்த ஆடைகளை அணிந்திருப்பது ஆணா? பெண்ணா?என்பதை எவ்வாறு வங்கி அதிகாரிகளால் தெரி;ந்துக்கொள்ளமுடியும் என்று தேரர் கேள்வி எழுப்பியுள்ளார்.