இலங்கை தமிழர்களுக்கு அதிகாரங்களை வழங்கி அவர்களை கௌரவமாகவும் இறைமையையும் பாதுகாக்க, இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் என்று பாரதீய ஜனதாக்கட்சி இந்திய மத்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்திய மத்திய அரசாங்கம், இலங்கை தமிழர்களை பாதுகாக்காத நிலையில், வெளியுலகுக்கு தமிழர்களை பாதுகாப்பதாக பொய்க்கூறி வருகிறது என்று பாரதீய ஜனதாக்கட்சியின் தலைவர் பொன் ராதாகிருஸ்ணன் குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கை தமிழர்களுக்கு உரிமைகளை வழங்குவதற்காக தமது கட்சி ஏற்கனவே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
எனினும் இந்திய காங்கிரஸ் கட்சி, தமிழர்களின் நலனில் அக்கறைக்கொள்ளவில்லை என்றும் ராதாகிருஸ்ணன் குற்றம் சுமத்தியுள்ளார்