தேர்தலுக்கு தயாராகுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச.மத்திய மற்றும் வடமேல் மாகாண முதலமைச்சர்களுக்கு பணித்துள்ளார்
அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின்போது ஜனாதிபதி முதலமைச்சர்களுக்கு இந்தப்பணிப்புரையை விடுத்தார்.
இந்தநிலையில் இரண்டு மாகாணங்களிலும் துரித அபிவிருத்திகளை முன்னெடுக்க, நிதிகளை ஒதுக்கீடு செய்யவுள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது உறுதியளித்தார்.
இந்த வார இறுதியில் குறித்த இரண்டு மாகாணசபைகளும் கலைக்கப்படவுள்ள நிலையில் ஜனாதிபதி இந்த பணிப்புரையையும் உறுதிமொழியையும் வழங்கினார்