இந்தியா சென்றுள்ள தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினர் நாளை செவ்வாய்க்கிழமை இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கை சந்திக்கவுள்ளனர்
இன்று அவர்கள் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனை சந்தித்து உரையாடினர்.
இலங்கை அரசாங்கம், இந்திய இலங்கை உடன்படிக்கையை மீறியுள்ளது. எனவே அதனை இந்தியாவுக்கு தெரியப்படுத்துவதற்காகவே தாம் இந்தியாவுக்கு சென்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அமைச்சரவை அண்மையில் 13 வது அரசியலமைப்பின் இரண்டு மாகாணங்கள் இணையும் ஏற்பாட்டை ரத்துச்செய்யும் யோசனைக்கு அங்கீகாரம் வழங்கியமையையும் சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்