13 வது அரசியல் அமைப்பை திருத்த இலங்கையின் கட்சிகள் முயற்சித்து வருகின்றமை தொடர்பில் இந்தியா, தமது கருத்தை இலங்கைக்கு தெரிவிக்கும் என்று இந்திய பிரதமர் தெரிவித்துள்ளார்
பிடிஐ செய்திசேவை இதனை தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் இலங்கைக்குள் கட்சிகள், தமது தீர்மானத்தை எடுத்துள்ளன
எனினும் இந்தியா, இது தொடர்பில் ஆராய்ந்து தமது கருத்தை இலங்கைக்கு தெரிவிக்கும் என்று இந்திய பிரதமர் மன்மோகன்சிங், தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் உள்ள அனைத்து சமூகங்களுடனும் ஒன்றிணைந்து செயற்பட்;டு அவர்களுக்கு அந்த நாட்டில் கிடைக்கவேண்டிய உரிமைகளை பெறுவதற்கு செயற்படுகிறது
அத்துடன்,இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் இந்தியா செயற்படும் என்று மன்மோகன்சிங் தமது கடிதத்தில் தெரிவித்துள்ளார்