அவுஸ்திரேலிய கிறிஸ்மஸ் தீவில் தங்கவைக்கப்பட்டுள்ள அகதிகளுக்கு சட்ட உதவிகள் மறுக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது
குறிப்பாக கிறிஸ்மஸ் தீவில் உள்ள அகதி முகாம்களை நிர்வகிக்கும் அதிகாரிகள் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதிப்பதில்லை என்று ஆர்.ஏ.சி.ஏஸ். என்ற அகதிகள் நலன் பேணும் அமைப்பு தெரிவித்துள்ளது
கிறிஸ்மஸ் தீவில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் தாம் சட்ட ஆலோசனைகளை பெற முடியாதிருப்பதால் எந்த நேரத்திலும் திருப்பி அனுப்பப்படலாம் என்ற அச்சத்தைக் கொண்டுள்ளதாக தெரிவிக்கின்றது.
இந்த குற்றச்சாட்டு தொடர்பில் அவுஸ்திரேலிய குடிவரவுத் திணைக்களம் எந்த பதில் தகவலையும் வெளியிடவில்லை என த காடியன் செய்தித் தாள் தெரிவித்துள்ளது