இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகர் யஸ்வரதன் குமார் சிங்ஹா இன்று இலங்கை வந்தடைந்தார்
32 வருட ராஜதந்திர அனுபவத்தைக்கொண்ட சிங்ஹா, இந்திய வெளியுறவுத்துறையிலும் பல முக்கிய பொறுப்புக்களை வகித்துள்ளார்
இலங்கைக்கு வருவதற்கு முன்னர் அவர்,ஐக்கிய நாடுகளின் நியூயோர்க் தலைமையகத்தில் கடமையாற்றினார்
அத்துடன் வெணிசுலா, துபாய், போன்ற இடங்களிலும் தூதராக கடமையாற்றியுள்ளார்
1958 ஆம் ஆண்டு பிறந்த அவர், புதுடில்லி பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறையை கற்றவராவார்