Hot News
Home » செய்திகள் » மன்மோகன்சிங் உறுதியளித்தார் – செல்வம் அடைக்கலநாதன்

மன்மோகன்சிங் உறுதியளித்தார் – செல்வம் அடைக்கலநாதன்

13வது அரசியல் அமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்த இலங்கை அரசாங்கம் முனைவது மற்றும் ஏனைய விடயங்கள் குறித்து அந்த நாட்டு அரசாங்கத்துடன் பேச்சு நடத்தவுள்ளதாக இந்திய பிரதமர் தெரிவித்துள்ளார்

இந்தியா சென்றுள்ள தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர்களை இன்று சந்தித்த இந்திய பிரதமர் மன்மோகன்சிங், அவர்களின் முறைப்பாடுகளை கேட்டறிந்தார்

இதன்போது இலங்கை அரசாங்கம் 13வது அரசியல் அமைப்பி;ல் மாற்றங்களை ஏற்படுத்த முனைவது,தமிழர்களின் காணி அபகரிப்பு, இராணுவ மயமாக்கல் உட்பட்ட பல்வேறு அத்துமீறல்களை தலைவர் சம்பந்தன் தலைமையிலான குழுவினர் சுட்டிக்காட்டியதாக நாடாளுமன்ற உறுப்பினர், டெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்

இதற்கு பதிலளித்த மன்மோகன்சிங் இந்தியா இலங்கை தமிழர்களை ஒருபோதும் கைவிடாது என்று உறுதியளித்துள்ளார்

அத்துடன் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினரின் கோரிக்கைகள் முறைப்பாடுகள் குறித்து இலங்கை அரசாங்கத்துடன் பேசவுள்ளதாகவும் மன்மோகன்சிங் உறுதியளித்ததாக செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டார்

TELO Media Team 1