இலங்கையின் நாவலையில் அமைந்துள்ள திறந்த பல்கலைகழகத்தின் தமிழ் பெண் விரிவுரையாளர் ஒருவர் மீது சட்டபீட மாணவர் ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளார்
திறந்த பல்கலைக்கழக சட்டபீட தலைமையாளரான யசோதரா கதிர்காமதம்பி என்பவரே தாக்குதலுக்கு உள்ளானார்
இவரை தாக்கிய மாணவர் சட்டபீடத்தில் பயிலும் ஒரு மருத்துவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
தாக்குதலுக்கான காரணம் தெரியவரவி;ல்லை.
கையில் வெட்டுக்காயங்களுடன், விரிவுரையாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்
அதேநேரம் தாக்குதலை நடத்திய மருத்துவரும் கைதுசெய்யப்பட்டு பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்