Hot News
Home » செய்திகள் » அவுஸ்திரேலியாவில் விடுதலைப்புலிகளை கட்டுப்படுத்தவேண்டும்

அவுஸ்திரேலியாவில் விடுதலைப்புலிகளை கட்டுப்படுத்தவேண்டும்

அவுஸ்திரேலியாவில் தமிழீழ விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவேண்டும் என்று இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது

இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜி எல் பீரிஸ், இந்தக்கோரிக்கையை அவுஸ்திரேலிய பிரதமரிடம் விடுத்துள்ளார்.

இதேவேளை இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அவுஸ்திரேலியா வழங்கும் என்று பிரதமர் ஜூலியா கிளாட் தெரிவித்துள்ளதாக இலங்கையின் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டு ஏற்பாடுகளில் உதவுவதற்காக இரண்டு அதிகாரிகளை தாம் இலங்கைக்கு அனுப்பிவைக்கவுள்ளதாகவும் ஜூலியா கிளாட் உறுதியளித்துள்ளதாக இலங்கை வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டுள்ளது

TELO Media Team 1