இலங்கை மாகாணசபைகளுக்கு வழிவகுத்த 13வது அரசியலமைப்பை ரத்துச்செய்வதற்கு இந்தியா, அனுமதிக்காது என்று நம்புவதாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் இந்த நம்பிக்கையை வெளியிட்டுள்ளார்.
13வது அரசியல் அமைப்பு திருத்தத்தை இலங்கை ரத்துச்செய்வதில் பாரிய திட்டம் ஒன்று இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
போரை வெற்றிக்கொண்டு விட்ட நினைப்பிலேயே இலங்கை அரசாங்கம் இந்த 13வது சரத்தையும் ரத்துசெய்ய முனைவதாக சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்