இலங்கைக்கு 2000ம் ஆண்டில் விஜயம் செய்திருந்த போது தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக நோர்வேயின் முன்னாள் அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.சிங்கள கடும்போக்குடைய சக்திகள் தம் மீது குண்டுத் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக 12 ஆண்டுகளின் பின்னர் நோர்வே ஊடகமொன்றுக்கு நேர்காணல் வழங்கியுள்ளார்.இந்தத் தாக்குதல் திட்டம் குறித்து பொலிஸாருக்கு அறிவித்ததாகக் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2000மாம் ஆண்டு மே மாதம் 22ம் திகதி சொல்ஹெய்ம் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார்.முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தும் நோக்கில் அவர் இலங்கை விஜயம் செய்திருந்தார். சொல்ஹெய்ம் இலங்கை விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய தினம் நோர்வே தூதரகத்தின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.2009ம் ஆண்டில் இலங்கை அரசாங்கம் திடீரென போர் செய்யத் தீர்மானித்ததாக அவர் நேர்காணலில் மேலும் குறிப்பிட்டுள்ளார். இந்தத் தகவல் தொடர்பில் இலங்கை அரசாங்கம் எவ்வித பதிலையும் இதுவரையில் வெளியிடவில்லை.