Hot News
Home » செய்திகள் » சமல் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும்

சமல் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக சமல் ராஜபக்ச நிறுத்தப்பட வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அத்துடன் பிரதமராக மகிந்த ராஜபக்ச நியமிக்கப்பட வேண்டியதும் கட்டாயம் எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் அவர், 19ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு அமைய புதிதாக தெரிவு செய்யப்படும் ஜனாதிபதிக்கு நிறைவேற்று அதிகாரங்கள் ஓரளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது. பிரதமருக்கு அதிகளவான அதிகாரங்கள் இருக்கின்றன.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அரசியல்வாதியாக மாற தயாரானால், அவரை சூழ மக்கள் சக்தியை கட்டியெழுப்ப வேண்டும் எனவும் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.