Hot News
Home » செய்திகள் » வலி கிழக்கில் பிரதேச சபையில் கறுப்பு யூலை அனுஷ்டிப்பு

வலி கிழக்கில் பிரதேச சபையில் கறுப்பு யூலை அனுஷ்டிப்பு

வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையில் கறுப்பு யூலை நினைவேந்தல் இன்று (25) காலை அனுஷ்டிக்கப்பட்டது.

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை வளாகத்தில் தவிசாளரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மத்திய குழு உறுப்பினருமான தியாகராஜா நிரோஷ் தலைமையில் சபையின் உறுப்பினர்கள், செயலாளர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் ஒன்று கூடினர்.

1983 ஜூலை 25-27 வெலிக்கடைச் சிறையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஸ்தாபகத் தலைவர் தங்கத்துரை, தளபதி குட்டிமணி, முன்னணிப் போராளிகளான ஜெகன், தேவன் மற்றும் அனைத்துப் போராளிகள் மற்றும் தமிழ் மக்களுக்கு எதிராக முடுக்கிவிடப்பட்ட இனவாதத் தாக்குதல்களையும் உயிர்நீத்த பொது மக்களை நினைவு கூர்ந்து அஞ்சலிக்கப்பட்டது.


அஞ்சலி செலுத்துவதற்கான பொது ஈகைச்சுடர் தவிசாளரினால் ஏற்றப்பட்டதுடன் பிரதேச சபையின் உறுப்பினர்கள் கைகளில் மெழுவர்த்தியை ஏந்தியவாறு அஞ்சலித்தனர்.

 தொடர்ந்து இனியொரு கறுப்பு யூலை வேண்டாம். இனவாதம் அரச இயந்திரம் முதல் சிவில் சமூகங்கள் வரையில் முற்றாக ஒழிக்கப்படவேண்டும் என்ற தொனிப்பொருளில் தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் உரைகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.