Hot News
Home » செய்திகள் » பாவற்கொடிச்சேனையில் மீண்டும் யானைகளின் அட்டகாசம்… தமிழ் தேசியக் கூட்டமைப்பி;ன் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் நேரில் சென்று பார்வை…

பாவற்கொடிச்சேனையில் மீண்டும் யானைகளின் அட்டகாசம்… தமிழ் தேசியக் கூட்டமைப்பி;ன் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் நேரில் சென்று பார்வை…

மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பாவற்கொடிச்சேனை நொச்சியாண்டான்கல் கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை காட்டு யானைகள் கிராமத்தில் புகுந்து கிராமவாசிகளின் பல வீடுகளையும் மக்களின் உடமைகளையும் சேதமாக்கியுள்ளன.

கடந்த சில வருடங்களாக மாவட்டத்தின் இவ்வாறான பல எல்லைப்புற கிராமங்களில் காட்டுயானைகளின் தாக்கம் அதிகரித்த வண்ணமே காணப்படுகின்றது. இதனால் கிராமமக்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாவதுடன் மிகவும் பீதியடைந்த நிலையிலேயே தமது வாழ்வாதாரத்தினை மேற்கொள்கின்றனர்.

இவ்வாறு யானைகளின் தாக்கத்தினால் பாதிப்புக்குள்ளான நொச்சியாண்டானகல்; கிராமத்தினை நேற்று சனிக்கிழமை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கி.துரைராஜசிங்கம் மற்றும் பிரசன்னா இந்திரகுமார் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டதுடன் கிராம மக்களுடன் கலந்துரையாடலும் மேற்கொண்டனர்.

இதன் போது அவர்கள் காட்டுயானைகளின் தாக்குதல் தொடர்பில் பலரும் பல வழிகளில் இதனை கட்டுப்படுத்துவதற்கு போராடிக்கொண்டிருக்கின்றனர் அந்தவகையில் மேற்கொள்ளப்பட இருக்கின்ற திட்டங்களை உடன் துரிதப்படுத்துவதற்கு உரிய அரச அதிகாரிகள் ஆவண மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.


TELO Media Team 1