அரசாங்கத்தின் சில பிழையான தீர்மானங்களே சுகாதாரத்துறையில் பிரச்சினைகள் ஏற்படக் காரணம் என ஜே.வி.பி கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
சுகாதாரத்துறையின் சில முரண்பாடுகள் பாரியளவிலான பிரச்சினையாக மாறுவதற்கு அரசாங்கமே பொறுப்பு சொல்ல வேண்டும்.
சுகாதாரத்துறையில் நிலவி வரும் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உடனடித் தீர்வு வழங்க வேண்டும்.
சுகாதாரத்துறை பிரச்சினையால் நோயாளிகள் பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
அரசாங்கத்தின் கொள்கைகள் காணரமாக ஒவ்வொரு துறையிலும் இவ்வாறான பிரச்சினைகள் நிலவி வருகின்றன என ஜே.வி.பி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஜே.வி.பி பொதுச் செயலாளர் அவுஸ்திரேலியாவிற்கு விஜயம்
ஜே.வி.பி. கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா அவுஸ்திரேலியாவிற்கு விஜயம் செய்துள்ளார்.
கட்சியின் அவுஸ்திரேலிய பிரிவினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள நிகழ்வுகளில் பங்கேற்கும் நோக்கில் அவர் அவுஸ்திரேலியாவிற்கு விஜயம் செய்துள்ளார்.
இரண்டு வாரங்கள் அவுஸ்திரேலியாவில் ரில்வின் சில்வா தங்கியிருப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கட்சியின் கொள்கைகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் கூட்டங்களில் ரில்வின் சில்வா பங்கேற்க உள்ளார்.
கட்சியின் அவுஸ்திரேலிய கிளை ஒழுங்கமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.