தமிழ் ஈழ விடுதலை இயக்கம் ரெலோவின் முன்னாள் தலைவர் அமரர் சிறீ சபாரத்தினத்தின் இருபத்தியெட்டாவது ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்வு 1986ம் ஆண்டு அவர் சுட்டுக் கொல்லப்பட்ட இடமான கோண்டாவில் அன்னங்கை கோகிலா வீதியிலுள்ள தோட்ட வெளியில் 06.05.2014 அன்று மாலை நடைபெற்றது.
நிகழ்வில் தலைவரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, சுடரேற்றி மலரஞ்சலியும் இடம் பெற்றது. மேற்படி நிகழ்வில் வடக்கு மாகாணசபை உறுப்பினரும் ரெலொவின் தேசிய அமைப்பாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம், வடக்கு மாகாணசபை உறுப்பினர் கே.என்.விந்தன் கனகரத்தினம், கட்சியின் செயலாளர் நாயகம் ஹென்றி மகேந்திரன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல சட்டத்தரணியுமான என்.சிறிகாந்தா, கட்சியின் யாழ்.மாவட்ட செயலாளர் திலீப், கட்சி முக்கியஸ்தர்களான குகதாஸ், சில்வெஸ்ரர் யாழ். மாநகரசபை எதிர்க்கட்சித் தலைவர் என். இராஜதேவன் ஆகியோருடன் இன்னும் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.