பெண்களை ஏமாற்றி கொள்ளையிட்டு வந்த பஸ் நடத்துனர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சிலாபம் பிரதேசத்தில் வைத்து குறித்த பஸ் நடத்துனர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பஸ்ஸில் பிரயாணம் செய்யும் பெண்களை ஏமாற்றி மயக்க மருந்து கொடுத்து, பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
குறித்த பஸ் நடத்துனர் பத்துக்கும் மேற்பட்ட பெண்களின் பெறுமதியான நகைகள், செல்லிடப் பேசிகள் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையிட்டுள்ளார்.
மேல் மாகாணத்தைச் சேர்ந்த பத்து பெண்களிடமிருந்து கொள்ளையிடப்பட்ட நான்கரை லட்ச ரூபா பெறுமதியான தங்க நகைகளை பொலிஸார் மீட்டுள்ளனர்