Hot News
Home » செய்திகள் » கொம்பனித்தெருவில் ஆர்ப்பாட்டங்களை நடத்த நீதிமன்றம் தடை

கொம்பனித்தெருவில் ஆர்ப்பாட்டங்களை நடத்த நீதிமன்றம் தடை

கொழும்பு கொம்பனித் தெருவில் இன்று ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களை நடாத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் போராட்டங்களை நடத்தக் கூடாது என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கோட்டை மாவட்ட நீதிமன்றிற்கு வழங்கிய அறிவிப்புக்கு அமைய தடை உத்தரவு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

போராட்டங்கள் நடத்த வேண்டுமாயின் அதற்கு நீதிமன்றின் அனுமதி அவசியமாகின்றது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் உள்ளிட்ட சில மாணவர் அமைப்புக்களினால் போராட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச இளைஞர் மாநாடு நடைபெற்று வரும் நிலையில் கொழும்பில் போராட்டங்களை நடாத்த அரசாங்கம் தடை விதித்துள்ளது.

போராட்டங்கள் நடத்தப்பட்டால் அது சர்வதேச ரீதியாக பாதக விளைவுகளை ஏற்படுத்தும் என்ற காரணத்தினால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாடு நடைபெற்ற காலத்திலும் கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களை நடாத்த தடை விதிக்கப்பட்டிருந்தது.

TELO Media Team 1