நியூஸிலாந்து புதிதாக இலங்கை உட்பட்ட 14 நாடுகளுடன் வான்வெளி உடன்படிக்கைகளை செய்து கொள்ளவுள்ளது.
இலங்கையை தவிர பின்லாந்து சவூதி, எத்தியோப்பியா, ஷம்பியா போன்ற நாடுகளும் இதில் உள்ளடங்குகின்றன.
இதனையடுத்து நியூஸிலாந்தின் வர்த்தகத்துக்கு பாரிய வழி திறந்துவிடப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் போக்குவரத்து அமைச்சர் கெரி பிரௌன்லி தெரிவித்துள்ளார்.
அண்மையில் இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜி எல் பீரிஸுடன் செய்துக்கொள்ளப்பட்ட இந்த உடன்படிக்கையின்படி நியூஸிலாந்தின் நேரடி விமானங்கள் இலங்கைக்கு சேவைகளை மேற்கொள்ளும் என்று பிரௌன்லி குறிப்பிட்டுள்ளார்