அரசாங்கம் பற்றி வெளியே விமர்சனம் செய்ய வேண்டாம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்தள்ளார்.
இந்த சந்திப்பு அலரி மாளிகையில் நடைபெற்றது.
அரசாங்கத்தின் சட்ட மூலங்கள் மற்றும் வேறும் நிர்வாக விடயங்கள் தொடர்பில் கருத்து முரண்பாடு இருந்தால் நேரடியாக சொல்ல வேண்டும்.
பின்னால் சென்று வேறு வேறு இடங்களில் சொல்வதில் பயனில்லை.
அமைச்சரவை அல்லது நாடாளுமன்றக்குழுக் கூட்டங்களில் இது குறித்து அறிவிக்க முடியும்.
வெளிநாடுகளில் சென்று அரசாங்கத்தின் நிர்வாக விவகாரங்களை ஆளும் கட்சியினர் பேசுவது பொருத்தமாகாது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.