Hot News
Home » செய்திகள் » வெளிநாடுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள தூதுவர்கள் மட்டக்களப்புக்கு விஜயம்

வெளிநாடுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள தூதுவர்கள் மட்டக்களப்புக்கு விஜயம்

இலங்கை அரசாங்கத்தினால் வெளிநாடுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் இன்று மட்டக்களப்பு மாவட்டத்துக்கு விஜயம் செய்தனர்.
சவூதி அரேபியா, ஆப்கானிஸ்தான், பிலிப்பைன்ஸ், சீஸல் ஆகிய நாடுகளுக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவினால் நியமிக்கப்பட்ட தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களே இந்த விஜயத்தினை மேற்கொண்டுள்ளனர்.

இவர்கள் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்துக்கும் வருகை தந்தனர். இவர்களை மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் வரவேற்றார்.

அதனைத்தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் தேவைப்பாடுகள் தூதுக் குழுவினருக்கு மாவட்ட அரசாங்க அதிபரினால் விளக்கமளிக்கப்பட்டது.

அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தின் தற்போதைய நிலை மற்றும் மேற்கொள்ளப்படவுள்ள செயற்றிட்டங்கள், மீள்குடியேற்ற நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடினர்.

அதனைத்தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று மக்களின் நிலைமைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டனர்

TELO Media Team 1