Hot News
Home » செய்திகள் » இந்தியா சென்ற விமானம் இலங்கையில் தரையிறக்கப்பட்டுள்ளது

இந்தியா சென்ற விமானம் இலங்கையில் தரையிறக்கப்பட்டுள்ளது

இந்தியாவின் கேரளா மாநிலத்தில் பெய்யும் கனமழைக் காரணமாக சவூதி அரேபியாவின் ஜெத்தா நகரில் இருந்து இந்தியா நோக்கி சென்ற விமானம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.
எஸ்.வி 892 என்ற சவூதி விமான சேவைக்கு சொந்தமான விமானமே நேற்று முன்தினம் தரையிறக்கப்பட்டதாக அரபு செய்தி சேவை இன்று தெரிவித்துள்ளது.

இந்த விமானம் ஜெத்தாவில் இருந்து கோழிகோடு நோக்கி சென்றது. கேரளவில் பெய்யும் மழை காரணமாக நேற்றைய தினமும் விமான பயணத்திற்கு தடையேற்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுமார் 7 மணிநேரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானம் பின்னர் இந்தியா நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளது.

TELO Media Team 1