Hot News
Home » செய்திகள் » இலங்கையில் தென்னாபிரிக்காவின் முயற்சிகள் தொடர்கின்றன: நிமால் சிறிபால டி சில்வா

இலங்கையில் தென்னாபிரிக்காவின் முயற்சிகள் தொடர்கின்றன: நிமால் சிறிபால டி சில்வா

இலங்கையிலும் தென்னாபிரிக்காவின் உண்மை மற்றும் நல்லிணக்க நடைமுறைகளை முன்கொண்டு செல்லும் முகமாக தென்னாபிரிக்காவின் விசேட பிரதிநிதி சிறில் ரம்போஸா மீண்டும் இலங்கை செல்லவுள்ளார்.

தென்னாபிரிக்க பொதுத்தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் அவர் அடுத்த மாதத்தில் இலங்கை செல்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்னாபிரிக்காவில் நடைபெற்ற தேர்தல் காரணமாகவேரம்போஸாவின் முயற்சிகள் ஸ்தம்பித்திருந்தன.

அவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இந்த விடயம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் மற்றும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பிரதிநிதிகள் தென்னாபிரிக்காவுக்கு சென்று கள ஆய்வுகளை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

TELO Media Team 1