இராணுவ பிரசன்னத்திற்கு எதிரான போராட்டத்திற்கு ரெலோ ஆதரவு.
தமிழினத்தின் மீது தொடர்ச்சியாக சிங்கள பேரினவாத அரசுகளின் முப்படைகளாலும், அரங்கேற்றப்பட்டுவரும் அடக்குமுறை, ஒடுக்குமுறை, இன அழிப்பு படுகொலைகளை வெறுமனே நாம் வேடிக்கைபார்த்துக் கொண்டிருக்க முடியாது.
முப்படையினரின் இனவாத செயற்பாடுகள் நடைபெற வடக்கு கிழக்கிலே காணப்படும் அதிகூடிய தோவையற்ற இராணுவ முகாம்களும் முப்படையினரின் பிரசன்னமுமே காரணமாகும்.-2009 ம் ஆண்டு போர் மெளனிப்பிற்கு பிறகும் கூட தமிழினத்தை நிம்மதியாக வாழவிடக்கூடாதென்கின்ற நிகழ்ச்சி நிரலில் படையினர் செயற்படுவதாகவே நாம் கருதுகின்றோம்.
அன்றைய காலத்திலே எம்மினத்தின் மீது பேரினவாதிகளால் நிகழ்த்தப்பட்ட அடக்குமுறைகளுக்கு முகம் கொடுத்துவந்த எமது மக்களை பாதுகாப்பதற்காக வடக்கு கிழக்கிலிருந்து இராணுவம் உள்ளிட்ட முப்படைகளின் பிரசன்னத்தையும் முற்றாக அகற்றவேண்டும் என்ற நோக்கோடும். எமது மக்களின் சுதந்திர வாழ்வியல் இராணுவ பிரசன்னத்தை அகற்றுவதன் ஊடாக உறுதிப்படுத்தப்படும் என்ற நம்பிக்கையிலும் மக்களையும் மண்ணையும் காத்திட தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தினராகிய நாம் ஆயுதம் ஏந்தினோம்.
இன்றைய சூழ்நிலையில் மக்களை அச்சுறுத்தும் அதித இராணுவ பிரசன்னமும் அதன் அடக்கு முறை இன அழிப்பு வடிவங்களும் எமது இனத்தின் எதிர்கால இருப்பை கேள்விக்குரிய தாக்குகின்றது. அந்தவகையிலே 18/08/2025 ம் ‘திகதி நாளைய தினம் இலங்கை தமிழரசுக் கட்சியால் முன்னெடுக்கப்பட்டுள்ள வடக்கு கிழக்கு தழுவிய இராணுவ பிரசன்னத்திற்கு எதிரான போராட்டத்திற்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கம் “ரெலோ” ஆதரவளிக்கின்றது.
இதவேளை இலங்கை தமிழரசுக்கட்சி சகல தமிழ்தேசிய அரசியல் கட்சிகளையும் கலந்தாலோசித்து இந்த போராட்டத்தை முன்னெடுத்திருக்க வேண்டும் மாறாக தன்னிச்சையாக எடுத்த முடிவு தவறானதாகும் .
இருந்த போதிலும் இனத்தின் அடிமை விலங்கொடிக்க இராணுவம் உள்ளிட்ட முப்படைகளின் பிரசன்னத்தை எமது தாயக பூமியான வடக்கு கிழக்கிலிருந்து முற்றாக அகற்ற வேண்டும் அதன் ஊடாக தமிழினத்தை சுதந்திரமாக வாழவிட வேண்டும் என்ற உயரிய நோக்கில் முப்படைகளுக்கும் எதிராக ஆயுதம் ஏந்தியவர்கள் என்ற வகையில் இராணுவ பிரசன்னத்திற்கு எதிரான போராட்டத்திற்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கம் “ரெலோ” ஆகிய நாம் ஆதிரவளிக்கின்றோம்.
அ. அடைக்கலநாதன்
வன்னி பாராளுமன்ற உறுப்பினர்.
தலைவர் .
தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ).