இலங்கை மத்திய வங்கியின் தற்போதைய ஆளுநர் டபிள்யு.டி லக்ஷ்மன் எதிர்வரும் 14ஆம் திகதி ஆளுநர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
அது தொடர்பிலான கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இராஜாங்க அமைச்சரும் முன்னைநாள் மத்திய வங்கியின் ஆளுநருமான அஜித் நிவாட் கப்ரால் மீண்டும் மத்திய வங்கியின் ஆளுநர் பதவிக்கு நியமிக்கப்படவுள்ளார்.
எதிர்வரும் 16ஆம் திகதி இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக பதவியேற்கவுள்ளதாகவும் அது தொடர்பிலான வர்த்தமானி அறிவிப்பு வெளியாகும் என்றும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே பதவி விலகும் தற்போதைய ஆளுநர் டபிள்யு.டி. லக்ஷ்மனுக்கு சர்வதேச நாணய நிதியத்தில் உயர் பதவி ஒன்று வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தனது பதவி விலகலை அறிவிக்கும் நோக்கில் இன்று வெள்ளிக்கிழமை சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ.டி.லக்ஷ்மன்,
நான் அடுத்த மாதம் எனது 80 ஆவது வயதுப் பூர்த்தியுடன் ஓய்வுபெறுவதற்குத் தீர்மானித்திருந்தேன். இருப்பினும் கடந்த 10 நாட்ககளில் நடந்த மனதிற்குவேதனையளிக்கக்கூடிய சம்பவங்களின் காரணமாக எதிர்வரும் 14 ஆம் திகதி செவ்வாய்கிழமை எனது பதவியிலிருந்து ஓய்வுபெறுவதற்குத்தீர்மானித்திருக்கின்றேன்.
இலங்கையின் மிகவும் உயர் கௌரவத்திற்குரிய பதவியை வகித்த காலப்பகுதியில் எனக்கு வழங்கப்பட்டிருந்த பொறுப்புக்களை உரியவாறுநிறைவேற்றுவதற்காக இரவு, பகல் பாராமல் மிகுந்த அர்ப்பணிப்புடன் சேவையாற்றியிருக்கின்றேன். இருப்பினும் எமது கட்டுப்பாட்டையும் மீறிய அக மற்றும்புறக்காரணிகளின் தாக்கத்தின் விளைவாக அனைத்து சந்தர்ப்பங்களிலும் எம்மால் எதிர்பார்த்த பெறுபேறைப் பெற்றுக்கொள்ளமுடியாமல்போனது.
இலங்கை மத்தியவங்கியின் ஆளுநராக நான் பதவியேற்றுக்கொண்டதன் பின்னர் சுமார் 3 மாதங்களில் நாடு கொவிட் – 19 வைரஸ் பரவலால் ஏற்பட்டநெருக்கடிக்கு முகங்கொடுக்கவேண்டியேற்பட்டமையை அனைவரும் அறிந்திருப்பீர்கள்.
அதற்கு மத்தியில் உளரீதியான மற்றும் கட்டமைப்பு ரீதியான பல சவால்களும் காணப்பட்டன. அவ்வாறிருப்பினும் எதிர்பார்த்த பெறுபேறைஅடைந்துகொள்வதற்காகக் கொள்கை மற்றும் கட்டமைப்பு ரீதியில் அவசியமான மாற்றங்களை மேற்கொண்டேன்.
எனவே உளரீதியான அழுத்தங்களுக்கு இடையில் மத்தியவங்கியின் ஆளுநர் பொறுப்பிலிருந்து தற்போது விலகநேர்ந்திருப்பதை நானும் எனக்குமிகநெருக்கமானவர்களும் ஓர் அதிஷ்டமாகவே கருதுகின்றோம்.
மேலும் அதிக ஊதியம் மற்றும் ஏனைய பல்வேறு சலுகைகளுடன் எதிர்வரும் வருடத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் பதில் நிறைவேற்று அதிகாரியாகப்பதவியேற்றுக்கொள்ளுமாறும் அதற்காக மத்தியவங்கியின் ஆளுநர் பொறுப்பிலிருந்து விலகுமாறும் என்னிடம் கோரப்பட்டமையை இங்கு குறிப்பிடவிரும்புகின்றேன்.
நான் சர்வதேச நாணய நிதியத்தில் பதவியொன்றைப் பொறுப்பேற்கவிருப்பதாகக் கடந்த வாரங்களில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
அவை மேற்படி கோரிக்கையை மையப்படுத்தியே வெளியிடப்பட்டிருக்கக்கூடும் என்று நான் அனுமானிக்கின்றேன். இதற்கு முன்னரும் மத்திய வங்கியின்ஆளுநர் இவ்வாறு சர்வதேச நாணய நிதியத்தில் பதவி வகித்திருப்பதாக என்னிடம் கூறப்பட்டது. அது மிகவும் விரும்பப்படக்கூடிய பதவி என்றாலும், எனதுகொள்கைகள் மற்றும் நிலைப்பாடுகளை அடிப்படையாகக்கொண்டு நான் அந்தப் பதவியை நிராகரித்திருக்கின்றேன். எனவே இப்பதவியிலிருந்துஓய்வுபெற்றதன் பின்னர் எனது உடல்நலத்தில் கவனம் செலுத்தக்கூடியவகையிலான ஓய்வுகாலம் கிடைக்கும் என்று நம்புகின்றேன், எனக் குறிப்பிட்டார்.