ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருடன் ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் சந்திப்பு

இன்றைய தினம் 25/6/2025 புதன்கிழமை மாலை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் சிறிலங்கா விமானப்படையின் உலங்கு வானூர்தி மூலம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்திருக்கின்றார். கெளரவ பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருக்கு இடையில் சந்திபொன்று நடைபெற்றுள்ளது.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்க் நல்லூர் கோவில் வீதியில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தில் செல்வம் அடைக்கலநாதன் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.