காலிமுகத்திடல் போராட்டக்காரர்களின் 13 கோரிக்கைகள்.

காலிமுகத்திடல்  போராட்டக்காரர்கள் 13   கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

இதற்கமைய தற்போது ஜனாதிபதி மாளிகை, பிரதமர் அலுவலகத்தை கையகப்படுத்தியுள்ள நிலையில் அவர்களால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளாக

கோரிக்கைகள்

  1. ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை ,ராஜினாமா செய்வதுடன், பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட அமைச்சரவை, பதவி விலக வேண்டும்.
  2. கோட்டா- ரணில் அரசாங்கம் பதவி விலகியவுடன், மக்களின் போராட்டத்துடன், பொருளாதாரம், சமூக, அரசியல் நோக்கங்கள் ஆகியவற்றை கருத்திற்கொண்டு, இடைக்கால அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட வேண்டும்.
  3. இடைக்கால அரசாங்கத்தின் செயற்பாடுகளை கண்காணிக்கும் வகையில், மக்கள் கவுன்சில் ஸ்தாபிக்கப்பட வேண்டும்.
  4. பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், குறுகிய மற்றும் நீண்ட கால திட்டத்தை செயற்படுத்த வேண்டும். எரிபொருள், எரிவாயு மற்றும் கல்வி, பொது போக்குவரத்து சேவை வினைத்திறனாக்கல், நுண் கடன் மற்றும் விவசாய கடன்களை ,ரத்து செய்யப்படுவதுடன், லீசிங், சிறு வியாபார கடன்களை ,இரத்து செய்தல் அல்லது மீள் செலுத்தலுக்கான கால அவகாசம் வழங்கல்.
  5. தற்போது கைது செய்யப்பட்டுள்ள போராட்டகாரர்கள் உட்பட, சகல அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும். அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளாகி உள்ளவர்களுக்கு நியாயம் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.
  6. கொலை, காணாமல் ஆக்கபட்ட விடயங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்க, விசேட பொறிமுறை தயாரிக்கப்பட வேண்டும்.
  7. கடந்த இரண்டு தசாப்தங்களாக, ராஜபக்ஷர்களால் மோசடி செய்யப்பட்ட அரச நிதி, முறையான விசாரணைகளுடன் அரசு உடமையாக்கப்படுவதுடன், மோசடியாளர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அரசியல்வாதிகள் முறைகேடான முறையில் சேகரித்துள்ள சொத்துக்கள் கணக்காய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
  8. தற்போதைய வரி முறைமை மாற்றி அமைக்கப்பட்டு, நேர் வரியை அதிகரித்து, மறைமுக வரியை குறைக்க வேண்டும். நாட்டு மக்களுக்கு சாதகமான முறையில், வரி கொள்கை மாற்றி அமைக்கப்பட வேண்டும்.
  9. கோட்டாபய ராஜபக்ஷ பதவியில் இருந்து விலகியதை தொடர்ந்து, மக்கள் அதிகாரத்தை உறுதிப்படுத்தும் வகையில், புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை, முழுமையாக இரத்துச் செய்யப்பட வேண்டும்.
  10. மக்கள் வாக்கெடுப்புடன், புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும். உயிர் வாழும் உரிமை அடிப்படை உரிமையாகவும், நிறைவேற்று அதிகாரம் இரத்துச் செய்தல், நீதியான தேர்தல் இடம்பெறும் முறையான பொறிமுறை ஸ்தாபிக்கப்பட வேண்டும்.
  11. மக்களுக்கு பொறுப்புக் கூறாத அரசியல்வாதிகளை மீளழைக்கும் உரிமை உறுதிப்படுத்தும் பொறிமுறை வகுக்கப்பட வேண்டும். சட்டவாக்கத்தில் மக்கள், மக்கள் பிரதிநிதிகளை தவிர்த்து பங்குபற்றும் சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும். கல்வி, சுகாதாரம் ஆகிய துறைகளின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்.
  12. இனவாதம், தேசிய ரீதியான அழுத்தங்களை முழுமையாக இல்லாதொழித்து, சமத்துவத்தை உறுதிப்படுத்துவதற்கும், சகல இ னங்களினதும், மதம், மொழி, பால் மற்றும் ஏனைய கலாசார தனித்துவ அடையாளங்களை உறுதிப்படுத்துவதற்கும் ஏற்புடைய வகையில், அடிப்படை சட்டம் பலப்படுத்தப்பட வேண்டும்.
  13. இடைக்கால அரசாங்கத்தின் அடிப்படை நோக்கங்களாக, மேற்குறிப்பிட்ட விடயங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதுடன், ஸ்தாபிக்கப்படும் இடைக்கால அரசாங்கம், 12 மாத காலப்பகுதியில், புதிய அரசியலமைப்பை உருவாக்குவதுடன் நிறைவடைய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.