சர்வதேச நீதி மற்றும் விசாரணைப் பொறிமுறையை வலியுறுத்தி தடம்புரளாத பயணம்

இன்று பலர் நாட்டிலும் புலத்திலும் எம்மக்களின் பிரச்சனையை தாமேதான் ஐநாவுக்கு அதுவும் 2009 இற்கு பின்னர் எடுத்துச் சென்றதாக அறைகூவல் விடுக்கிறார்கள்.

ஆனால் 1984 ஐப்பசி மாதம் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் எமது மக்கள் மீது திட்டமிட்ட இனவழிப்பு நடைபெறுகிறது என்பதை ஐநா செயலாளர் நாயகத்திற்கு அறிக்கையிட்டதோடு ஆதாரங்களோடு நேரடி சந்திப்புக்கான கோரிக்கையையும் அனுப்பி வைத்தது.

மறைந்த, ஒப்பற்ற தமிழ் தேசியத்தின் தலைவன் சிறிசபாரத்தினம் ஐநா செயலாளர் நாயகத்திடம் முன்வைத்த கோரிக்கை முரசொலி பத்திரிகையில் ஆதாரமாக….

தொடர்ந்தும், இன்றும் ரெலோ அதில் உறுதியாகவே உள்ளது ,

2019 பங்குனியில் சர்வதேச நீதி மற்றும் விசாரணைப் பொறிமுறையை வலியுறுத்தி ஐ.நா. மனித உரிமை உயர்ஸ்தானிகரிடம் கோரியது

2021 மாசி மாதம் பிரித்தானிய வெளியுறவு செயலகத்திடம் பூச்சிய வரைபை பலப்படுத்திய பிரேரணை ஆக்குமாறு வலியுறுத்தியது

தொடர்ந்தும் எம்மக்களின் நீதி, அரசியல் தீர்வு, மற்றும் நிலையான பொருளாதாரக் கட்டமைப்புக்காய் போராடும்

சுரேந்திரன்
ஊடகப் பேச்சாளர்
ஊடக வாரியம்
தமிழ் ஈழ விடுதலை இயக்கம்- ரெலோ
தமிழ் தேசியக் கூட்டமைப்பு