சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவியை பெறும் நிலையில் இலங்கை

அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவியை பெறும் நிலையில் உள்ளது என சிரேஷ்ட அதிகாரிகள் நேற்று (4) தெரிவித்துள்ளனர்.

இந்த மாதம் முடிவடைவதற்கும் முதற்கட்டமாக 300 மில்லியன் டொலர்களை எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ள அதிகாரிகள் அல்லது சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவி தொடர்பான இறுதி இணக்கப்பாடு சாத்தியமாகலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியோவாவுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளின் பின்னர் இந்த நிலை உருவாகியுள்ளதாக உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கை மக்கள் அனுபவிக்கின்ற துயரங்களை தான் உணர்ந்துள்ளதாக தெரிவித்துள்ள கிறிஸ்டலினா ஜோர்ஜியோவா சர்வதேச நாணய  நிதியத்தின் திட்டத்தை நோக்கி அரசாங்கம் எடுத்துள்ள துணிச்சலான நடவடிக்கைகளை பாராட்டியுள்ளார்.

இலங்கையின் நிதியமைச்சு சர்வதேச நாணய நிதியத்தி;ன் பணிப்பாளர்களிடம் கடிதம் மூலம் முறைப்படியான விண்ணப்பமொன்றை சமர்ப்பிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.