பயங்கரவாதத் தடைச்சட்டம் பயன்படுத்துவது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் கவலை

கைது செய்யும் நடவடிக்கைகளுக்காக தொடர்ந்து பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் கவலை வெளியிட்டுள்ளது.

சர்வதேச தரநிலைகள் மற்றும் மனித உரிமைகள் மரபுகளுக்கு ஏற்ப சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்றும் இதற்கிடையில் உறுதிமொழிகளின்படி பயங்கரவாத தடைச்சட்டத்தைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்றும் அவ்வொன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.