பிரித்தானியாவில் எழுச்சி தலைவர் சிறீசபாரத்தினத்தின் 39 ஆம் ஆண்டு நினைவஞ்சலி

எழுச்சித்தலைவர் சிறீசபாரத்தினம் மற்றும் முன்னூறுக்கும் அதிகமான போராளிகள் ஆதரவாளர்களது நினைவஞ்சலி நிகழ்வு பிரித்தானியாவில் நேற்று ஞாயிறு 25.05.2025 ரெலோ பிரித்தானியாகிளை உறுப்பினர்களால் உணர்வுபூர்வமாக அஞ்சலி செய்யப்பட்டது.

முதல் ஈகை சுடரை ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஏற்றிவைத்தார்,சகோதர படுகொலையில் கொல்லபட்ட போராளிகள் பொதுமக்களிற்காக இரண்டு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

சிறப்புரைகள் பிரித்தானியாவிற்கு வருகை தந்த தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் பறுவா மோகன் ஆகியோாரால் நிகழ்த்தப்பட்டது.

நன்றி உரை பிரித்தானிய கிளையின் தலைவர் சாம் சம்பந்தன் வழங்கினார்.

இதனை தொடர்ந்து சமகால அரசியல் நிகழ்வுகள், வரும் மாகாண சபை தேர்தலை எப்படி எதிர் கொள்வது , உள்ளூராட்சி சபைகளை வினைத்திறனுடன் கையாள எப்படியான கூட்டுக் களை உருவாக்க வேண்டும் யாருக்கு ஆதரவுகளை வழங்குவது,ரெலோ வின் சர்வதேச கட்டமைப்பும் நாட்டில் உள்ள மாவட்ட கிளைகளும் இணைந்து எப்படியாக இயங்குவது போன்று பல விடயங்கள் ஆராயப்பட்டது.