புதிய பிரதமராக கரு ஜயசூரியவை நியமிக்க சிலர் யோசனைகளை முன்வைத்துள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி இடைக்கால அரசாங்கத்திற்கு இணக்கம் தெரிவித்துள்ளபோதும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ள மாட்டார் என தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் பொதுவான ஒருவராக கருஜயசூரியவை பிரதமராக நியமிக்க வேண்டும் என்று சிலர் கோரிக்கைகளை விடுத்து வருகின்றனர்.
இதன்படி கருஜய சூரிய இணங்கினால் அவர் பாராளுமன்றம் வரும் வகையில், தான் எனது தேசியப் பட்டியல் ஆசனத்தை அவருக்காக விட்டுக்கொடுக்க தயார் என்று ஹரீன் பெர்ணான்டோ கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.