மே தின கூட்டங்களையும், நிகழ்வுகளையும் நடத்துவதற்கு அனுமதி வழங்காதிருக்க தீர்மானித்துள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கு அனைத்து கட்சிகளும் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்று (20) கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயற்பாட்டு மையம் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.