அகில இலங்கைக் கம்பன் கழகத்தின் மூன்றாம் கட்ட வெள்ள நிவாரண நிதியுதவி

அகில இலங்கைக் கம்பன் கழகம் தனது உள்நாட்டு, வெளிநாட்டு உறுப்பினர்களின் ஆதரவோடு இயற்கை அனர்த்தத்தால் பாதிப்புற்ற மக்களுக்கு கொழும்பு மாநகர சபையின் மூன்றாம் கட்ட நிதியுதவியான ரூபா 250000/= இரண்டரை இலட்சத்தினை தமிழ்த் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவருமான கௌரவ செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் மூலமாக மன்னார் மக்களுக்கு அனுப்பி வைத்துள்ளது.

கொழும்பில் உள்ள கம்பன் கழக அலுவலகத்தில் மேற்படி தொகைக்கான காசோலை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நிதியுதவியை வழங்கிய அகில இலங்கை கம்பன் கழகம் ஊடாக நிதியுதவியை வழங்கிய அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.