அமெரிக்கா, பிரித்தானியா இலங்கைக்கு பயண எச்சரிக்கை

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துவரும் நிலையில், இலங்கைக்கான பயண எச்சரிக்கையை பிரித்தானியாவும், அமெரிக்காவும் விடுத்துள்ளன.

கொரோனா தொற்று காரணமாக இரண்டாவது நிலை பயணக் கட்டுப்பாடுகளை அமெரிக்கா நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிலையம் அறிவித்துள்ளது.

2021 ஏப்ரல் 21 ஆம் வெளியிடப்பட்ட இந்த இரண்டாம் நிலை பயண ஆலோசனை நாட்டில் கொரோனா தொற்றின் மிதமான அளவைக் குறிக்கிறது.

இதேவேளை இலங்கைக்கான நுழைவு கட்டுப்பாடுகள் குறிப்பாக தனிமைப்படுத்தல் மற்றும் பி.சி.ஆர். சோதனைக்கான ஏற்பாடுகளுக்கு உட்பட்டு பிரித்தானியாவும் பயண ஆலோசனையை வெளியிட்டுள்ளது.

இந்தப் பயண ஆலோசனை 2021 ஏப்ரல் 26 ஆம் திகதி பிரித்தானிய அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ளது.