இந்திய – இலங்கை நல்லுறவை சீர்குலைக்கும் மெல்கம் ரஞ்சித் – சிவசேனா அமைப்பு குற்றச்சாட்டு!

இந்திய – இலங்கை நல்லுறவை சீர்குலைக்கும் விதமாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை செயற்படுவதாக தமிழ்நாடு சிவசேனா அமைப்பின் மாநில செயல் தலைவர் க.சசிகுமார் குற்றம் சுமத்தியுள்ளார்.

இலங்கையில் இருந்து தமிழகத்துக்கான கப்பல், விமான போக்குவரத்துகளை விரிவுபடுத்த இந்திய அரசாங்கம் முக்கியத்துவம் கொடுத்து வருவதாக க.சசிகுமார் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையே பாலம் அமைக்கப்பட்டால் இலங்கையின் இறையாண்மைக்கு பங்கம் ஏற்படுமென கர்தினால் மல்கம் தெரிவித்த கருத்தை வன்மையாக கண்டிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இலங்கையின் சுதந்திரமும் பறிபோகும் என்றும் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை குறிப்பிட்டிருந்தார்.

வளமான, வலிமையான நாடாக இலங்கையை உருவாக்க வேண்டும் என்பதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும்
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் பல்வேறு ஒப்பந்தங்களில் கையழுத்துட்டுள்ளதாக க.சசிகுமார் மேலும் தெரிவித்தார்.

இந்திய அரசாங்கம் பல கோடி நிதியை இலங்கை அரசாங்கத்திற்கு ஒதுக்கியுள்ளதாக தமிழ்நாடு சிவசேனா அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, இந்திய அரசாங்கத்தினால் இலங்கையில் 10 ஆயிரம் பேருக்கு வீடு கட்டிக் கொடுக்கும் திட்டம் மற்றும் பல்வேறு திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் இந்திய-இலங்கை நல்லுறவைச் சீர்குலைக்கும் விதமாக, இலங்கையின் கத்தோலிக்க ஆயர் கருதினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை செயற்படுவதாக தமிழ்நாடு சிவசேனா அமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது.

Related