இந்திய மீனவ அமைப்புகளின் தலைவர்களுக்கும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ கட்சியின் தலைவர் கெளரவ செல்வம் அடைக்கலநாதன் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்றைய தினம் 27/3/2025 வியாழக்கிழமை மன்னார் மாவட்ட தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ காரியாலயத்தில் இடம்பெற்றது.
மேற்படி சந்திப்பு நிகழ்வில் இந்திய மீனவ அமைப்புகளின் தலைவர்கள் கெளரவ செல்வம் அடைக்கலநாதன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கெளரவித்திருந்தனர். மேலும் வடபகுதி மீனவர்கள் குறிப்பாக மன்னார் மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை முன்னிலைப்படுத்தி இந்திய மீனவர்கள் மற்றும் வடபகுதி மீனவர்களுக்கு மத்தியில் நடைபெறும் பிரச்சனைகளையும் இரு தரப்பு விவாதங்களையும் ஒரே மேடையில் வைத்து பேசி தீர்க்கவும் ,இரு தரப்பினருக்குமான ஒரு இணக்கப்பாட்டை உருவாக்குவதற்கான ஆரம்ப செயற்பாடாக கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களை இந்திய மீனவ பிரதிநிகளின் இன்றைய சந்திப்பு அமைந்ததுடன் நேற்றைய தினம் வவுனியாவில் இவ்வாறானதொரு கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
மீனவ சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்ட இவ் சந்திப்பில் மன்னார் மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சனைகள் பற்றி சுட்டிக்காட்டப்பட்டு மீனவர்களின் பல்வேறுபட்ட பிரச்சனைகள் பற்றி ஆராய்ந்து கலந்தாலோசிக்கப்பட்டது.